லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேம்பிரிட்ஜ் நகரத்திலிருந்து வடமேற்கே சில மைல் தொலைவில் உள்ள ஹன்டிங்டன் சந்தைப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடந்தது.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் விமான ஆம்புலன்ஸ் உட்பட அவசரகாலச் சேவைகள் ஹன்டிங்டன் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளன.
இந்தத் தாக்குதல் ஒரு முக்கியச் சம்பவம் (Major Incident) என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் போக்குவரத்துப் போலீஸ் (BTP) தெரிவித்துள்ளது.
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் பலர் காயம்
