ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 0 min read

ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடப்படுகிறது.

கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இதேபோல பழவங்காடி விநாயகர் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author