அமராவதி தான் இனி ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி இருக்கும் என்றும், போலவரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் நாயுடு உறுதியளித்தார்.
விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும் மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அமராவதி தான் நமது தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்வோம், பழிவாங்கும் அரசியலை அல்ல. விசாகப்பட்டினம் மாநிலத்தின் வணிக தலைநகராக இருக்கும். மூன்று தலைநகரங்களை உருவாக்க முயற்சிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை நாங்கள் விளையாட மாட்டோம்.” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author