நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4.2 டன் உதவிப் பொருட்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 7) இந்தியா சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நேபாள்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த பொருட்கள் இந்திய அரசின் சார்பில் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங் அவர்களால் பாங்கே மாவட்ட முதன்மை அதிகாரி ககேந்திர பிரசாத் ரிஜாலிடம் ஒப்படைத்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தார்பாய்கள், தூங்கும் பைகள், போர்வைகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.