எஸ்.சி.ஓ என அழைப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் உள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி விரிவாக்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளின் தலைமை அமைச்சர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டத்தில் அக்டோபர் 16ஆம் நாள் பங்கேற்ற லீச்சியாங் உரை நிகழ்த்தியபோது, தத்தமது நெடுநோக்குத் திட்டங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பெரிய இடர்பாடுகளைச் முனைப்புடன் சமாளிக்கவும், மக்கள் தொடர்பை விரிவாக்கவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் செயல்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.