அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் $283 மில்லியன் மதிப்புள்ள 2 டன் தங்கத்தை ஈரானுக்குத் திரும்ப ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஈரானுக்கு எதிராக அமீரக நிலப்பரப்பில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவுமே அமீரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஈரானுக்குத் தங்கம் மற்றும் விமானங்கள் மாற்றம்?
Estimated read time
1 min read
