வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

Estimated read time 0 min read

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை, இது அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மத்திய வளைகுடாவில் நின்று கொண்டே இருக்கும். பின்னர் வறண்ட காற்றினால் பாதிக்கப்பட்டு காலியான ஓட்டுடன் மீண்டும் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.விரிவான அப்டேட் விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author