மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதியான ஆன்மீக நகரமான தென்காசி, இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது.
இதுவரை விவசாயத்திற்கும், குற்றாலச் சாரலுக்கும் பெயர்பெற்ற இந்த மாவட்டம், தற்போது டீப்-டெக் (Deep-tech) எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப வல்லுநர்களைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவின் இன்டெல் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்தன் ஐயாசாமி, இங்கு தென்காசி செமிகண்டக்டர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
