பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்  

Estimated read time 0 min read

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் நேற்று (ஜனவரி 9) காலமானார்.
திரை இசை உலகில் 60 ஆண்டுகளாக தனது காந்த குரலால் ரசிகர்களை மயக்கிய அவர், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
தனது தனித்துவமான குரலினால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன், பல விருதுகளுக்கு உரியவர்.
அவருக்கு தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, 4 முறை தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது மற்றும் 5 முறை கேரளா அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author