37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்  

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 21 அன்று மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி தனது கடிதத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா இந்த பகுதியில் சிறு-குறு மீனவர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, இந்த விவகாரத்தை தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர்கள் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது கவலையளிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author