மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது, வரும் டிரம்ப் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிற சர்வதேச பிரமுகர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாட உள்ளார்.
வெளியுறவுத்துறை இதுகுறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவால் ஜெய்சங்கர் அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது விஜயத்தில் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் புதிய அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் அடங்கும் என்று அது மேலும் கூறியது.