இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, புதுதில்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், இந்த பயணத்தில் அதிபர் சுபியாண்டோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுபியான்டோ தனது இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தோனேசியா முதலில் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தியா இதுகுறித்து கவலைகளை எழுப்பியதாக கூறப்படுகிறது, இதனால் பாகிஸ்தான் பயணத்தை இந்தோனேசிய அதிபர் ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.