வசந்த விழாவானது, சீனர்கள் பாரம்பரியப் புத்தாண்டைக் கொண்டாடும் சமூக நடைமுறை என்பதை உணர்ந்து யுனெஸ்கோ அமைப்பானது இவ்விழாவை மனித பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வ பட்டியலில் சேர்த்தது. இந்த அங்கீகாரம் வசந்த விழாவும், சீன பண்பாடும், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை வெளிக்காட்டிய ஒன்றாகும். பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்துடன் தொடர்பான அம்சங்கள், இவ்வாண்டு வசந்த விழா கொண்டாட்ட நடவடிக்கைகளில் வெளிக்காட்டப்பட்டன.
வசந்தவிழா இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு, உலகிற்கு மகிழ்ச்சியான அமைதியான தகவல்களை வழங்கும் வசந்த விழா, உலகளாவிய கொண்டாட்ட பழக்கமாக மாறியுள்ளது. உலக முழுவதும், ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சீனப் பண்பாட்டு சின்னமாகவும் வசந்தவிழா மாறியுள்ளது.
சீனப் பண்பாட்டின் சாளரமாகத் திகழும் வசந்த விழாவின் மூலம், திறப்பு மற்றும் சகிப்புதன்மை வாய்ந்த சீனாவை உலகம் அறிந்து கொண்டுள்ளது. அதோடு வசந்த விழாக் கொண்டாட்டமானது சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்துக்கான சாட்சியாகவும் விளங்குகின்றது. சீனர்கள், வசந்த விழாவைக் கொண்டாடும் உற்சாகம், புத்தாண்டை வரவேற்கும் விருப்பம், உலகம் ஒன்று தான் என்ற உணர்ச்சி ஆகியவற்றை வசந்த விழா உலகிற்கு தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.