மத்திய அரசு வங்கி வைப்புத் தொகைக்கான தற்போதைய ₹5 லட்சம் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (பிப்ரவரி 17) உறுதிப்படுத்தினார்.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி உள்ளிட்ட சமீபத்திய வங்கி மோசடிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம். நாகராஜு இதுகுறித்து கூறுகையில், இந்த திட்டம் மதிப்பாய்வில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீட்டை வழங்குகிறது.
கடந்த காலங்களில் முதன்மையாக கூட்டுறவு வங்கிகளுக்கான கோரிக்கைகளை இது தீர்த்து வைத்துள்ளது.
வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
