2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்  

Estimated read time 1 min read

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 இல் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத நெட்-ஜீரோ கார்பன் இலக்கை அடைவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
ரயில்வே நெட்வொர்க்கின் 97% க்கும் மேற்பட்ட பகுதிகள் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. 2025-26 நிதியாண்டில் முழு மின்மயமாக்கல் எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author