ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு  

Estimated read time 1 min read

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
உக்ரைனின் இந்த முடிவை அவர் வரவேற்றதுடன், ரஷ்யாவும் அதற்கு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
செவ்வாயன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் 30-நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் நேர்மறையான பதிலைத் தொடர்ந்து, அமெரிக்கா அவர்களுடன் உளவுத்துறை பகிர்வுக்கான இடைநிறுத்தத்தை நீக்கி, பாதுகாப்பு உதவியை மீண்டும் தொடங்க முடிவு செய்ததுள்ளது.
தொடர்ந்து இந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசுவதாகக் கூறிய டிரம்ப், அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author