அமெரிக்க தயாரிப்புகளுக்கு 34சதவீத கூடுதல் வரி விதிப்பு:சீனா

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டின் ஏப்ரல் 10ஆம் நாள் 12:01 மணி முதல், இறக்குமதி செய்யப்படும் அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் 34 சதவீத கூடுதல் வரிகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு “பரஸ்பர வரி” விதிப்பதாக அமெரக்க அரசு ஏப்ரல் 2ஆம் நாள் அறிவித்தது. சர்வதேச வர்த்தக விதிமுறைக்குப் பொருத்தமற்றதாக உள்ள அமெரிக்க அரசின் நடைமுறைக்குப் பதிலடியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன மக்கள் குடியரசின் சங்க வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள்,விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு இணங்க, சீன அரசவையைச் சேர்ந்த சுங்க வரி விதிமுறைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் நாள் 12:01மணிக்கு முன்பு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள், 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் 10ஆம் நாள் 12:01மணி முதல் 2025ஆம் ஆண்டின் மே 13ஆம் நாள் 24:00மணிக்கு வரை சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டால், கூடுதல் வரி விதிக்கப்படாது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டு இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்காக, சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுக்கான வர்த்தக சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, Skydio Inc உள்ளிட்ட 11 அமெரிக்க நிறுவனங்களை நம்பகமற்ற நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் ஏப்ரல் 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சீனா தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள், சீனாவில் புதிதாக செய்யும் முதலீடுகள் முதலியவற்றில் இந்த நிறுவனங்கள் ஈடுபட கூடாது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து, இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவிரவும், சீனா உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள சர்ச்சை தீர்வு அமைப்புமுறை மூலம் வழக்கு தொடுத்துள்ளதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 4ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள், உலக வர்த்தக அமைப்பின் உறுப்புகளின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக சீர்குலைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கின் நிலைத்தன்மைக்குபாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. சீனா இதை கடுமையாக எதிர்க்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author