சீனாவின் மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்வெளி பயணப் பணியகம் வெளியிட்ட செய்தியின் படி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் 17:17 மணிக்கு ஷென் ச்சோ 20ஆவது மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் லாங்மார்ச் 2F ஏவூர்தியின் மூலம் செலுத்தப்பட்டது. 10 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம், ஏவூர்தியிலிருந்து பிரிக்கப்பட்டு, திட்டவட்டமான பாதையில் நுழைந்துள்ளது. இப்போது விண்வெளி வீரர்களின் நிலைமை சீராக இருக்கிறது என்றும் ஏவுதல் கடமை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை, சீனாவின் 26 விண்வெளி வீரர்கள், 41 முறைகளாக விண்வெளியில் நுழைந்து கடமை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
