புதிய வளர்ச்சி வங்கி தலைவர் சிஎம்ஜிக்கு பேட்டி

Estimated read time 0 min read

ஏப்ரல் 29ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு நடத்திய புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ரோசெஃப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், புதிய வளர்ச்சி வங்கிக்கு மாபெரும் ஆதரவு மற்றும் உதவியை ஷிச்சின்பிங் வழங்கி வருகிறார். சீனாவின் வளர்ச்சியும், சீனா பின்பற்றி வரும் முறைமையும், முன்மாதிரியாகத் திகழ்ந்து, பல்வேறு நாடுகளும் வளர்ச்சி அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளன.

புதிய வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பின் சாதனை சின்னமாக, பிரிக்ஸ் எழுச்சி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் எழுச்சி, எதிர்கால விருப்பம் முதலியவற்றை வெளிக்காட்டுகிறது.

அனைத்து உறுப்பு நாடுகளும் சமமான அடிப்படையில் வங்கியின் திட்டப்பணிகளில் ஈடுபடலாம். எதிர்காலத்தில் சர்வதேச உறவின் புதிய ஒழுங்கு குறித்து, பலதரப்பு ஒழுங்கு மற்றும் மேலதிக ஒத்துழைப்பு வாய்ந்த புதிய உலகத்தைக் கட்டியமைப்போம் என்று தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author