சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் அவட்டி மாவட்டத்தில் உள்ள பருத்தி வயல்களுக்கு இடையே “வாழ்க்கையிலுள்ள துணிகள்” என்னும் புதிய ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த ஆவணப்படம், உள்ளூரில் பருத்தி சாகுபடி செய்து வரும் 2 குடும்பங்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளதோடு அவர்களின் அன்றாட சவால்கள் மற்றும் வெற்றிகளைச் சித்தரித்துள்ளது.
சின்ஜியாங்கிலுள்ள பருத்தி உற்பத்தி அளவு நாடளவில் 90 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. சின்ஜியாங்கில் வாழ்கின்ற லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை, பருத்திகளுடன் நெருங்கிய தொடர்புடையது. அவட்டி மாவட்டம் உயர்தர பருத்திக்கு மிகவும் புகழ் பெற்றது. 2021, 2023 ஆகிய ஆண்டுகளில், ஆவணப்படத்தின் பணியாளர்கள் அங்கே சென்று, உள்ளூர் விவசாயிகளின் சுறுசுறுப்பான வாழ்க்கையையும், பருத்திகளின் அமோக விளைச்சலையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆவணப்படம் நிஜ வாழ்க்கை கதையின் சக்தியை வலியுறுத்துகிறது. இந்த கதைகள் திரைக்கதை எழுத்தாளர்களால் வடிவமைக்கப்படவில்லை. அதற்கு மாறாக, மக்களின் மீள்திறன் மற்றும் நேர்மறையான மனப்பான்மையால் உருவாக்கப்பட்டது.