அவர் பைத்தியம் போல் செயல்படுகிறார்… ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்…!!! 

Estimated read time 0 min read

உக்ரைன் ரஷ்யா இடையாயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோன்று போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவும் முற்றிலும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. 266 ட்ரோன்கள் 45 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தன மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் நான் நல்ல உறவில் இருந்து வருகிறேன். ஆனால் புதினுக்கு ஏதோ நடந்து விட்டது. அவர் பைத்தியம் போல் செயல்படுகிறார். எந்தவித தேவையுமின்றி பொதுமக்கள் பலரை புதின் கொள்கிறார். காரணமின்றி உக்ரைன் மீது ட்ரோன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உக்ரைனையும் அடைய புதின் முயற்சித்ததால் அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author