ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

Estimated read time 0 min read

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author