அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்

Estimated read time 0 min read

அதிமுக கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத். இவர் ஐடி விங் துணை செயலாளராக பிரசாத் செயல்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் ஆக்யோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 5.20 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் நுங்கம்பாக்கம் பாரில் இது தொடர்பாக கடந்த 29ஆம் தேதி பிரச்சனை நடந்தது.

இதைத்தொடர்ந்து பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியுள்ளார். மேலும் அவர் மோசடி வழக்கில் கைதான நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author