ஜுன் 12ஆம் நாள் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இலண்டனுக்குப் புறபட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், இவ்விபத்தில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகியோருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முறையே ஆறுதல் செய்தி அனுப்பினார்.
அவர், சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, பிரிட்டன் தலைமையமைச்சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருக்கு சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஆறுதல் செய்தி அனுப்பினார் என்று தெரிவித்தார்.