ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Estimated read time 0 min read

தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது.

தமிழகத்தில் கன மழை பெய்து வருவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது.

அதோடு மீனவர்களை தாக்கி விரட்டியடித்து விட்டு அவர்களிடம் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படகு ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author