சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

Estimated read time 1 min read

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் நிசார் அலி கூறுகையில், 1958 முதல் 1998 வரை சிந்து நதி ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு-காஷ்மீர் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் 20 ஆயிரம் மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திறனில் 3 ஆயிரத்து 400 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ள அவர், 1954 ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீர் தன்னிறைவு பெற்ற பொருளாதார மாநிலமாக இருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிசார் தெரிவித்துள்ளார்.

செனாப் மற்றும் சிந்து நதி நீரை உகந்த முறையில் பயன்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் நிசார் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author