புதிய பான் கார்டு விண்ணப்பிக்க இது கட்டாயம் புதிய விதி அமல்

Estimated read time 0 min read

பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் போன்ற அனைத்திற்கும் பயன்படுகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே உள்ள பான் கார்டு எண் இலக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் அடையாள ஆவணமின்றி புதிய பான் கார்டு பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author