இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
பாகிஸ்தான் எல்லையில் சமீபத்திய முன்னேற்றங்கள், முக்கியமான பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகள் மீது இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதல்கள் மற்றும் இந்திய தளங்களை குறிவைத்து பாகிஸ்தானின் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து மோடியின் முதல் பொது உரை இதுவாகும்.
பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
