‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கோள் விண்ணில் பாய தயார் !!

Estimated read time 1 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ‘இன்சாட் -3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2024 புத்தாண்டில் கடந்த 1 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் ‘எக்ஸ்போசாட்’ என்ற ‘எக்ஸ்-ரே போலரிமீட்டர்’ என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6 ஆம் தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது.

இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இஸ்ரோவின் காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கைகொள் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author