கிரிபாடி சுதந்திர தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 12ம் நாள், கிரிபாடி நாடு சுதந்திரம் பெற்ற 46வது ஆண்டு நிறைவு குறித்து, அந்நாட்டு அரசுத் தலைவர் மாமௌவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், 2019ம் ஆண்டில் சீன-கிரிபாடி தூதாண்மையுறவு மீட்டெடுக்கப்பட்ட பின், சீராக வளர்ந்து வந்த இரு நாட்டுறவுடன், செழுமையான சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன. சீன-கிரிபாடி உறவில் முக்கியத்துவம் அளிக்கிறேன். அரசுத் தலைவர் மாமௌவுடன், அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பயன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, மக்களின் பரிமாற்றங்களை முன்னேற்றி, இரு நாட்டுறவை புதிய கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author