சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்பட 26 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் வரும் 3-ஆம் தேதி வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது.

இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், அதிநவீன ஆயுதங்களின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் 26 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் நடைபெறும் அணிவகுப்பை மேற்குலக நாடுகளும், சர்வதேச நோக்கர்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே, சீனாவில் 26 நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author