இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
சமீபத்தில் கேள்வித்தாள் கசிவு மற்றும் தேர்வு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தம் பரிசீலனையில் உள்ளது.
நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய நுழைவுத் தேர்வு நீட் ஆகும்.
இது, 1,08,000 க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடத்தப்படுகிறது.
பாரம்பரிய காகித அடிப்படையிலான தேர்வில் இருந்து ஆன்லைன் முறைக்கு மாறுவது சாத்தியமா என்பது குறித்து கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்
