தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா [மேலும்…]
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]