தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]
தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை [மேலும்…]
தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர்கள் சிலர், மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசியதைப் பற்றி ஒருவர் [மேலும்…]
இந்தியாவின் அணு ஆயுத பலம் குறித்த புதிய மதிப்பீடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Federation of American Scientists (FAS) [மேலும்…]
வரவிருக்கும் BRICS உச்சி மாநாட்டிற்கான பிரம்மாண்ட உணவு உபசரிப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரமாகச் செய்து வருவதாக ITC ஹோட்டல்ஸின் கார்ப்பரேட் நிர்வாகச் சமையல் கலைஞர் [மேலும்…]
சீன அதிபரின் இந்தியப் பயணம் ஏற்படுத்தும் புவிசார் அரசியல் தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெவ்வேறு கோணங்களில் செய்தி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது பற்றிய [மேலும்…]
புதுச்சேரி : மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதியான தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் [மேலும்…]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபாரமாக மீண்டு வந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் [மேலும்…]