தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பேட்மிண்டன் விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய மாற்றத்தை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், [மேலும்…]
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% முதல் 87% வரை வாக்குகள் பதிவாகி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே உற்று நோக்க [மேலும்…]
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் 2026 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வு [மேலும்…]
இழப்பை ஏற்காத நடிகர்களை கண்டித்து மே 2ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். வரும் காலங்களில் வருவாய் பகிர்வு அடிப்படையில் மட்டுமே திரைப்படங்களை [மேலும்…]
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நாளை திங்கட்கிழமை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் தொடங்க உள்ளதால் சென்னை நோக்கிப் [மேலும்…]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரிச் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த [மேலும்…]