தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவருடன் சந்தித்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் [மேலும்…]
மின்வெட்டை சரிசெய்ய 10 புதிய குழுக்களை அமைத்தது தமிழ்நாடு அரசு. சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் பல மணி நேரங்களுக்கு தினசரி மின்வெட்டு [மேலும்…]
சிட்டி குரூப் தனது தங்க விலை முன்னறிவிப்பைத் திருத்தியுள்ளது; அதன்படி, மூன்று மாத கால இலக்கை ஒரு அவுன்ஸுக்கு 4,300 டாலரிலிருந்து 4,000 டாலராகக் [மேலும்…]
சென்னை : திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் த.வெ.க சார்பாக போட்டியிடப் போவதாகச் சமூக ஊடகங்களில் கடந்த சில [மேலும்…]
5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், மனித-இயந்திர [மேலும்…]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து [மேலும்…]
நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் [மேலும்…]
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரவை ஒரு தீர்மானத்தை [மேலும்…]