தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது.
மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.91 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை தான் தாறுமாறாக எகிறி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.184-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 27ஆம் நாள் முற்பகல், அழைப்பின் பேரில், பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டார். அப்போது [மேலும்…]
இதய நோய் சிகிச்சையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) கணிசமாகக் குறைக்கும் லிப்ஃபெண்ட்ரா என்ற புதிய மாத்திரைக்கு அமெரிக்க [மேலும்…]
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த [மேலும்…]
பிரான்ஸிடம் 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் அந்நாடு பதிலளிக்கும் [மேலும்…]
இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை [மேலும்…]
தீப்பெட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வருகைப் பதிவுப் பலகை மூலம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் வருகையைக் கணிக்கும் விதம் சமூக வலைத்தளங்களில் [மேலும்…]
தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் [மேலும்…]
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி [மேலும்…]