மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Estimated read time 1 min read

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒன்றிய அரசு நிதி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பங்கீட்டை முறையாக வழங்கவில்லை. தமிழ்நாடு ஓரவஞ்சனைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளில் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழப்புகளை விளக்கிய ஸ்டாலின், “இது அரசியல் பழிவாங்கல்” என்று குற்றம்சாட்டினார். இந்த விமர்சனம், அரசின் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் போது எழுந்தது.சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. இதே கூட்டத்தில், சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா மீதான ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அதனை தொடர்ந்து, ஆளுநர், அரசு அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால், அதற்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. “சட்டமன்ற விதிகளுக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். மசோதாக்கள் மீது திருத்தங்கள் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, இது ஆளுநர்-அரசு உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதல்வர் ஸ்டாலின், ” சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை ஆய்வு செய்ய ஆளுநர் பரிந்துரை செய்தது ஏற்க முடியாது. சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டது, ஆளுநர் தலையிட முடியாது” என்று தெளிவுபடுத்தினார். ஆளுநரின் செயல்பாடு, தமிழ்நாட்டின் சித்த மருத்துவ முன்னேற்றத்தை தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தீர்மானம், சட்டமன்றத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முக்கிய அடியாக அமைந்தது. எதிர்க்கட்சி அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, “ஆளுநரின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியது” என்று ஆதரவு தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதி ஓரவஞ்சனை குறித்து பேசிய ஸ்டாலின், “நீங்கள் புதிதாக கூட்டணியில் சேர்ந்துள்ள காரணத்தால், ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வலியுறுத்துங்கள்” என்று கூட்டணி கட்சிகளை அழைப்புருத்தினார். தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிகமானும், பெறும் நிதி குறைவானும் இருப்பதை சுட்டிக்காட்டி, “இது அரசியல் பழிவாங்கல்” என்று கூறினார். இந்த விமர்சனம், சட்டமன்றத்தில் ஆதரவைப் பெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author