கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

Estimated read time 1 min read

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு வரி ஏய்ப்பு மற்றும் பல கோடி மதிப்புள்ள ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகும்.
இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்க இயக்குனரக(ED) அதிகாரிகள் செப்டம்பர் 2019இல் கைது செய்தனர்.

டெல்லி உயர்நீதிமன்றம் அதற்கு அடுத்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அப்போது, இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய சிவக்குமார், நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author