கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை “தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளான இந்த ஆண்டின் ”தியாகத் திருநாள்” நாளை (18.11.2025) அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
செக்கிழுத்த தியாகச் செம்மல் ! கப்பலோட்டிய தமிழன்! வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 5.9.1872 அன்று மகனாகப் பிறந்தார். ஒட்டப்பிடாரத்தில் அடிப்படைக் கல்வியையும், தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்டார்.
ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், தூத்துக்குடியில் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே “கப்பலோட்டிய தமிழன்” எனப் பெயர் பெற்றார்.
வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காகப் பொதுமக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்கள். இதன் காரணமாக, 1908-ம் ஆண்டு கோவை சிறையில் அடைத்தும் வ.உ.சி.யை செக்கிழுக்க வைத்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழியான தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களைப் படைத்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வானிலை தலைகீழாக மாறத் [மேலும்…]
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். [மேலும்…]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி [மேலும்…]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ஜி கே வாசன் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டு, பாஜகவின் தீவிர விசுவாசியாக [மேலும்…]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து திமுக தரப்பில் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் [மேலும்…]
இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனா். நேபாள தலைநகா் காத்மாண்டில் கடந்த [மேலும்…]