குரூப் 4-ல் காலிப் பணியிடங்கள் 5000-ஐ தாண்டியது!

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூடுதலாக 645 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற பல்வேறு பதவிகளுக்காக ஏப்ரல் 25, 2025 அன்று முதலில் 3935 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. பின்னர் செப்டம்பர் 26, 2025 அன்று 727 இடங்கள் சேர்க்கப்பட்டன.

இப்போது டிசம்பர் 3, 2025 அன்று மேலும் 645 இடங்கள் சேர்க்கப்பட்டதால், மொத்த இடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது. இதில், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக, 5101 காலிப் பணியிடங்களை 2025-26 நிதியாண்டில் நிரப்ப TNPSC இலக்கு வைத்துள்ளது. இது, கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நிரப்பப்பட்ட இடங்களின் (சராசரியாக 3560) எண்ணிக்கையை விட மிக அதிகம் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author