முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மேல்சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தலைநகர் பிரேசிலியா உள்பட ப்ளோரியானோபொலிஸ், சல்வடோர், ரெசிப் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
