ஜல்லிக்கட்டு 2026 : ஆட்சியர் அனுமதி முக்கியம்

Estimated read time 1 min read

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலங்காநல்லூர், பாலமேடு என எந்த ஊராக இருந்தாலும், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவே கூடாது. இந்த விதிகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சுவிரட்டு மற்றும் எருது விடும் விழாக்கள் என அனைத்து வீர விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளுக்குப் போட்டியின் போது எந்தவிதமான காயமோ அல்லது பாதிப்போ ஏற்படக்கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் பெயர் போன இந்த விளையாட்டை, எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக நடத்துவதே அரசின் இந்த நெறிமுறைகளின் முக்கிய நோக்கமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author