இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இம்மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

இந்த நிலையில், ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author