வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 0 min read

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகியுள்ள நிலையில், அதனை சரிகட்ட பல கட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா….

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு பாயும் நிதியை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது அமெரிக்கா… அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இறக்குமதிகளுக்கு மாற்றாக, வெனிசுலா எண்ணெயை வாங்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

இந்த நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப கூறியிருக்கிறார்… புளோரிடாவுக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதன்படி இந்தியா ஈரானுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான ஒப்பந்தத்தை உருவாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார். முந்தைய காலங்களில் ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா, அமெரிக்காவின் நீண்டகால தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டது

இந்த சூழலில் இந்தியா விரைவில் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க மீண்டும் அனுமதிக்கப்படலாம் என்ற அமெரிக்காவின் சமிக்ஞைகளை தொடர்ந்து டிரம்பின் பேச்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன… அதேபோன்று வெனிசுலா எண்ணெயை வாங்குவதற்கு சீனாவிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்..

இதனிடையே வெனிசுலாவின் இடைக்கால தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், அண்மையில் பிரதமர் மோடி உடன் பேசினார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்ததாகவும், வரும் ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்றியிருந்தார்..

ஒரு காலத்தில் இந்தியா லட்சக்கணக்கான பீப்பாய்கள் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்தது. ஒரு கட்டத்தில் கராகஸின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியாக இருந்தது. ஆனால் 2010 ஆண்டிற்கு பிற்பகுதியில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கிய பின்னர் வர்த்தகம் கடுமையாக சரிந்தது.

இதனால் இரண்டாம் நிலை அபராதங்களைத் தவிர்க்க இந்திய நிறுவனங்கள் கொள்முதலைக் குறைத்தன… தற்போது அமெரிக்க அதிபரின் பேச்சால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Please follow and like us:

You May Also Like

More From Author