சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Estimated read time 1 min read

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார்.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் 46 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, விரும்பியது கிடைப்பது மட்டும்தான் வெற்றியல்ல, கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் அச்சத்தை தவிர்த்து, வாய்ப்புகளை அடையாளம் கண்டு முன்னேற வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author