சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு – மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

Estimated read time 1 min read

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுக்குப் பிறகு, மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ், விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும் என்றார்.

விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், இந்தாண்டு முதல் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author