சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது.
பிஎல்எஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயில், சுமார் 80 பயணிகளுடன் ஸ்பீஸ் நகரில் இருந்து பிரிக் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காலை 7 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது.
மலைப்பாங்கான பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு ரயிலின் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவினால் ரயில் தடம் புரண்டது: 80 பயணிகளின் நிலை என்ன?
