தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பகுதிநேர ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு மட்டும் 10,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!#TNGovt #PartTimeTeachers #DinakaranNews pic.twitter.com/BNXeUZrj8Y
— Dinakaran (@DinakaranNews) March 3, 2026
“>
அரசின் இந்த அதிரடி முடிவால் ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
