நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 1:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தம் கேட்டது.
தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular Section) நுழைவாயிலைத் தாக்கிய இந்த வெடிப்புச் சம்பவத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், தூதரகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
“வெடிப்பு நடந்ததை நாங்கள் உறுதி செய்துள்ளோம். என்ன பொருள் வெடித்தது என்பது குறித்து இப்போது கூற முடியாது, ஆனால் இது ஒரு நபரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகத் தெரிகிறது” என்று ஓஸ்லோ காவல்துறை அதிகாரி மைக்கேல் டெல்லிமிர் தெரிவித்துள்ளார்.
நார்வேயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு
