ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதும் வீரப்பனின் மனைவி மற்றும் மகள்…

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும், அவரது மகள் வித்யாராணியும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aகிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் இவர்கள் இருவரும் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் வீரப்பனின் மகள் வித்யாராணி அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சார்பில் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், அவரது தாய் முத்துலட்சுமியும் அதே தொகுதியில் சுயேச்சையாகவோ அல்லது வேறொரு அமைப்பின் சார்பிலோ போட்டியிடப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக ஒரே தொகுதியில் மோதிக் கொள்வது பொதுமக்களிடையே வியப்பையும், அரசியல் நோக்கர்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வித்யாராணி ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தந்தை வீரப்பன் வாழ்ந்த மற்றும் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா என்பதும், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author