ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசியப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 27) மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் போர்ச் சூழலில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
