கடந்த முறை அமேதி! – இந்த முறை வயநாடு: மீண்டும் மண்ணை கவ்வும் ராகுல்காந்தி!

கேரளாவின் வயநாடு தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில், அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை பாஜக களமிறக்கியது. இதில், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை எதிர்த்து, வலுவான வேட்பாளரை பாஜக களமிறக்கி உள்ளது. இதனால், ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author