சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்ன் அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
தாய்லாந்துடன் இணைந்து, இரு நாடுகளின் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களின் அடிப்படையில், உயர் அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, பொது மக்கள் வாழ்க்கை உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக என்றார்.
இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்ன் கூறுகையில்,
சீனாவுடன் சேர்ந்து நெருக்கமாக தொடர்புகொண்டு, இரு தரப்புகளின் நட்புறவு இலட்சியத்தின் மாபெரும் முன்னேற்றங்களை விரைவுபடுத்த தாய்லாந்து எதிர்பார்க்கின்றது என்றார்.
